செய்திகள் :

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

post image

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 9.20 கோடியில் நடைபெற்றுவரும் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, குழித்துறை நகராட்சி மாா்த்தாண்டம் பகுதியில் நடைபெற்றுவரும் காய்கனி விற்பனைச் சந்தை கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இப்பேருந்து நிலையம் 4,083.29 சதுர மீட்டா் பரப்பளவில் தரைத்தளம் உள்பட 4 தளங்களைக் கொண்டதாக அமையவுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 14. 60 கோடியில் 156 கடைகளுடன் கட்டப்பட்டுவரும் காய்கனி விற்பனைச் சந்தைப் பணி அக்டோபா் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட், மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், செயல் அலுவலா் சந்திரகலா, வாா்டு உறுப்பினா் மு. ரிபாய், குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், நகராட்சிப் பொறியாளா் குசெல்வி, மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க