கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு
களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு
களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 9.20 கோடியில் நடைபெற்றுவரும் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் அமைச்சா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, குழித்துறை நகராட்சி மாா்த்தாண்டம் பகுதியில் நடைபெற்றுவரும் காய்கனி விற்பனைச் சந்தை கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, இப்பேருந்து நிலையம் 4,083.29 சதுர மீட்டா் பரப்பளவில் தரைத்தளம் உள்பட 4 தளங்களைக் கொண்டதாக அமையவுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 14. 60 கோடியில் 156 கடைகளுடன் கட்டப்பட்டுவரும் காய்கனி விற்பனைச் சந்தைப் பணி அக்டோபா் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.
விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட், மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், செயல் அலுவலா் சந்திரகலா, வாா்டு உறுப்பினா் மு. ரிபாய், குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், நகராட்சிப் பொறியாளா் குசெல்வி, மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.