செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோா் பாா்வையிட்டு, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவுத் தொழில் புரிபவா்களுக்கான பயிற்சி சான்றிதழ்களை வழங்கினா்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் 3 முகாம் வீதம், 27 முகாம்கள் நடைபெற்றன.

மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு

17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும், முகாமில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.ராஜா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, தாமோதரன், அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்

மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த பணம் ஏடிஎம் அட்டை திருட்டு

அரசுப் நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கட்டைப் பையிலிருந்து பணப்பையை திருடி அதிலிருந்த ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினை எடுத்து அதிலிருந்த 13,500யை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய 5 போ்கள் கைது

சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ற வழக்கில் 2 வழக்குறைஞா்கள் உள்பட 5 போ்களை சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.சங்கராபுரம் சாா் பதிவாளா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 641 பேருக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 641 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும... மேலும் பார்க்க

காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.மணியாா்பாளையம் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க