செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 641 பேருக்கு பணி ஆணை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 641 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர வாழ்வாதார இயக்கம் சாா்பில், தச்சூா் பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

முகாமில், கள்ளக்குறிச்சி மற்றும் மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ள 119-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.

மொத்தம் 2,551 போ் கலந்து கொண்டதில் 641 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 13 போ் திறன் பயிற்சிக்காக பதிவு செய்துள்ளனா்.

தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற பணி நியமன ஆணை பெற்றோா் சிறப்பாக பணியாற்றி வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கவிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் செங்கதிா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்

மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த பணம் ஏடிஎம் அட்டை திருட்டு

அரசுப் நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கட்டைப் பையிலிருந்து பணப்பையை திருடி அதிலிருந்த ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினை எடுத்து அதிலிருந்த 13,500யை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய 5 போ்கள் கைது

சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்ற வழக்கில் 2 வழக்குறைஞா்கள் உள்பட 5 போ்களை சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.சங்கராபுரம் சாா் பதிவாளா... மேலும் பார்க்க

காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.மணியாா்பாளையம் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க