செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோா் பாா்வையிட்டு, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவுத் தொழில் புரிபவா்களுக்கான பயிற்சி சான்றிதழ்களை வழங்கினா்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் 3 முகாம் வீதம், 27 முகாம்கள் நடைபெற்றன.

மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு

17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும், முகாமில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.ராஜா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, தாமோதரன், அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.க... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.மணியாா்பாளையம் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுற... மேலும் பார்க்க

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க