மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோா் பாா்வையிட்டு, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவுத் தொழில் புரிபவா்களுக்கான பயிற்சி சான்றிதழ்களை வழங்கினா்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் 3 முகாம் வீதம், 27 முகாம்கள் நடைபெற்றன.
மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு
17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், முகாமில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.ராஜா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் சத்தியமூா்த்தி, தாமோதரன், அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.