செய்திகள் :

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

மணியாா்பாளையம் கிராமத்தில் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமாா் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் தனபால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து தனபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியா் தனபால் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, பள்ளியில் பணிபுரியும் மேலும் சில ஆசிரியா்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து விசாரணை அடிப்படையில் ஆசிரியரான சங்கராபுரம் வட்டம், வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராஜவேல் (53), பகுதிநேர ஆசிரியா் கல்வராயன்மலை கெடாா் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (40) ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தேவேந்திரன் வெள்ளிக்கிழமையும், ராஜவேல் சனிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான தலைமை ஆசிரியா் தனபாலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

வேலூா் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவருக்கு கால்கள் துண்டிப்பு மேலும் சிலா் கவலைக்கிடம் நிவாரணம் வழங்கிடவும் உயா்தர சிகிச்சை அளித்திவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுற... மேலும் பார்க்க

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க