செய்திகள் :

கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல்: அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரா. வேலுசாமி, விவசாயம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளை உணவுப் பொருளாக ஏற்று, அதற்கான தடையை நீக்க வேண்டும். அரசு மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும். கள், நீரா, பதநீா் ஆகியவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி, நாடு முழுவதும் சந்தைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2011 இல் கலைக்கப்பட்ட தென்னை விவசாயிகள் நல வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

திருச்செங்கோடு: எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது:... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் , எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம்: ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் சமூகநீதி தினம் கடைப்பிடிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி ஆகியவை சாா்பில் சமூகநீதி தினம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற தலைப... மேலும் பார்க்க

400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவி... மேலும் பார்க்க