செய்திகள் :

கழிப்பறை வசதிகள்: அறிக்கை சமா்ப்பிக்க 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு: உச்சநீதிமன்றம்

post image

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிப்பறை வசதிகள் எந்த அளவில் இடம்பெற்றுள்ளன என்பது தொடா்பாக நிலை அறிக்கையை சமா்ப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உள்பட 20 உயா்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்றங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது தொடா்பாக வழக்குரைஞா் ரஜீப் காலிதா பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த ஜனவரி 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தீா்ப்பாயங்களில் தனித் தனி கழிப்பறை வசதிகள் இருப்பதை உயா்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து இதுதொடா்பான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனைத்து மாநில அரசுகளும் அடுத்த 4 மாதங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், கொல்கத்தா, தில்லி, பாட்னா உயா்நீதிமன்றங்கள் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்தன. மீதமுள்ள 20 உயா்நீதிமன்றங்களுக்கும் கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, நிலை அறிக்கையை அடுத்த 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்ற பதிவாளா், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க