செய்திகள் :

கழிவுநீர் குழியில் விழுந்து குழந்தை பலி: "ஜல்லிக்கட்டுக்குக் காட்டும் ஆர்வத்தை.." -கொதிக்கும் மக்கள்

post image

கழிவுநீர் குழியில் விழுந்து 4 வயது குழந்தை இறந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்கள்

மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெரிஞ்சிபட்டி கிராமத்தில் வசிக்கும் கட்டடத் தொழிலாளியான சந்தன கருப்பு-கிருஷ்ணவேணி தம்பதிக்கு 4 வயதில், கேசவன் 3 வயதில் ரோஷன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இவர்கள் வீட்டின் அருகே சமீபத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் குழியை மூடாமல் இருந்துள்ளனர். கழிவு நீர் தேங்கிப் பாதுகாப்பில்லாமல் இருந்த குழி அருகே நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இருவரும் குழிக்குள் விழுந்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அக்கம்பக்கமிருந்தவர்களும் குழந்தைகளை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் குழந்தை கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை ரோஷனை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த அரசு அதிகாரிகள் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல் கழிவுநீர் கால்வாய் குழியை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

குழந்தை

இதுகுறித்து பேசும் ஊர்க்காரர்கள், "கழிவுநீர் கால்வாயை ஊர்மக்களே தோண்டியதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திற்குத் தெரியாமல் எப்படிக் கழிவு நீர் கால்வாயைத் தோண்ட முடியும்?ஒரு குழந்தை இறந்து மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில் வட்டார அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வந்து கழிவு நீர் குழியை மூடிவிட்டுச் சென்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கத்தில் அலங்காநல்லூரில் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் வாராவாரம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அமைச்சர், கலெக்டர், சோழவந்தான் எம்.எல்.ஏ யாரும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவோ, ஆறுதல் சொல்லவோ வரவில்லை" என்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Kerala: மருத்துவமனையிலிருந்த உடல் உறுப்பு சாம்பிள்கள் மாயம்; வட மாநில இளைஞர் கைது; என்ன நடந்தது?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நோயாளிகளின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 17 உடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அந்த உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்தாலஜி டிப்பார்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை விற்பனை; 7 பேர் கைது; வெளியான அதிர்ச்சி பின்னணி

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்குத் திருமணமாகி ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்... மேலும் பார்க்க

கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த VAO - சேஸ் செய்து பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்துள்ள தொம்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிருஷ்ணசாமி மத்வராயபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்துக்குச் சென்... மேலும் பார்க்க

காதல் திருமணம்; தாலியை அறுத்தெறிந்த பெற்றோர்; உயிரிழந்த பெண் - காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி தமிழ்ப்பிரியா. இவர்களின் 21 வயது மகள் பூஜா. பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித... மேலும் பார்க்க

சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆச... மேலும் பார்க்க

``பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக... மேலும் பார்க்க