செய்திகள் :

கவிதை, கட்டுரை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!

post image

கரூரில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கினாா்.

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கரூா் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.21, 22-ஆம்தேதிகளில் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெற்றிபெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் 6 போட்டிகளுக்கும் ரூ.1.32 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

நிகழ்ச்சியின் போது தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் வே.ஜோதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.சு.சுகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

மக்காச்சோளம் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு!

கரூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1987-... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நூற்றாண்டு விழா

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பிப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிர... மேலும் பார்க்க

உழைக்கும் தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறு... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி!

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட... மேலும் பார்க்க

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

இறைச்சி கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை

இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ, பாலத்தின் அருகிலோ கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்... மேலும் பார்க்க