செய்திகள் :

காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள்: அண்ணாமலை

post image

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

இன்று காலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிந்தி திணிப்பை மையமாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட சவால் விடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்

இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் நடத்தும் ஆன்லைன் கையெழுத்து பிரசார இயக்கத்தில் 36 மணிநேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு, தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதல்வரான நீங்கள் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும், பிரசாரத்துக்கு எதிரான உங்களின் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.

ஆட்சியில் இருந்தபோதிலும், உங்களால் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்த முடியவில்லை, உங்களுக்கான இடத்தை அறிந்த உங்களின் தொண்டர்கள் துண்டுப்பிரசுரங்களை குப்பைத் தொட்டியில் வீசியதை நினைவில் கொள்ளுங்கள்.

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாளை சுற்றுவதை நிறுத்துங்கள். உங்களின் போலியான ஹிந்தி திணிப்பு நாடகம் ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதை உணராதது துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க