செய்திகள் :

காங்கயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது!

post image

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், சமச்சீர் பாசனத்தை வலியுறுத்தியும் இப்பகுதி விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதி பிஏபி பாசன விவசாயிகள், பொள்ளாச்சியில் உள்ள பிஏபி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காங்கேயத்திலிருந்து கிளம்பிச் செல்லத் தயாராகினர்.

இதனையொட்டி, காங்கயம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பகவதிபாளையம் பிரிவு அருகே இது குறித்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர், பொள்ளாச்சி செல்வதற்குத் தயாரானபோது அங்கு காங்கயம் காவல் துறை அனுமதி மறுத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு இருந்த கரூர் - காங்கயம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தொடர்ந்து காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, ஊதியூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 50 பெண்கள் உட்பட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க