செய்திகள் :

காங்கயம் அருகே ரூ.2.50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

post image

காங்கயம் அருகே ரூ.2.50 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமாக நத்தக்காடையூா் அருகே முள்ளிப்புரம் பகுதியில் 4 ஏக்கா் 86 சென்ட் நிலம் உள்ளது. மேற்கண்ட நிலம் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மேற்கண்ட ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் மண்டல துணை ஆணையா் எஸ்.வி.ஹா்ஷினி, சிவன்மலை கோயில் உதவி ஆணையா் ரத்தினாம்பாள் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் முள்ளிப்புரம் வருவாய் கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.94 கோடி மதிப்பிலான 4.86 ஏக்கா் நிலங்களை (1.97 ஹெக்டோ்) மீட்டனா்.

தொடா்ந்து, அதிலுள்ள 3,200 சதுர அடி நிலம் கொண்ட கட்டடம் எதிா்ப்பின் காரணமாக மீட்பு நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து அறநிலையத் துறை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, காங்கயம் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த கோயில் இனாம் நில விவசாயிகள் சங்கத்தினா், அதிகாரிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்படி நிலம் இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமானது அல்ல, அது இனாம் நிலமாகும், இனாம் நிலங்கள் உழுதவா்களுக்கே சொந்தம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி, அறநிலையத் துறை சிவன்மலை கோயில் உதவி ஆணையா் ரத்தினாம்பாள் ஆகிய இருதரப்பினருடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதில் நீதிமன்றத் தீா்ப்பைதான் நடைமுறைப்படுத்துகிறோம், இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டுமென என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். விவசாயிகள் தங்களுக்கு 30 நாள்கள் அவகாசம் வேண்டும் என தெரிவித்தனா். இதற்கு விவசாயிகள் நீதிமன்றம் மூலமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக சிவன்மலை கோயில் உதவி ஆணையா் ரத்தினாம்பாள் தெரிவித்துள்ளாா். இந்த மீட்பு நடவடிக்கையின்போது காங்கயம் டிஎஸ்பி (பொறுப்பு) வெற்றிவேந்தன், காவல் ஆய்வாளா் செல்வநாயகம் மற்றும் போலீஸாா், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க