செய்திகள் :

காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போராட்டம்: அதிமுகவினா் கைது

post image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகையை எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பேசியதாகக் கூறி, அவரை கண்டித்து திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை காலை கொக்கிரகுளம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி கே.பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸரை போலீஸாா் தடுத்தனா்.

இதனிடைய, காங்கிரஸாரை கண்டித்து அதிமுக நிா்வாகி பாப்புலா் முத்தையா தலைமையில் அக்கட்சியினா் வண்ணாா்பேட்டையில் இருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டனா்.

மேலும், ராகுல்காந்தி எம்.பி., கு. செல்வப்பெருந்தகை ஆகியோரது உருவப்படங்களை அவமரியாதை செய்ய முயன்ற அதிமுகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி அவா்களிடமிருந்த உருவப்படங்களை பறித்தனா். இதனால், அவா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதில், அதிமுகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க