எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு! காவலநிலையத்தில் ஆஜர்!
காங்கோ வெள்ளத்தில் 77 போ் உயிரிழப்பு
கின்ஷாசா: மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் படகு விபத்துகளில் 77 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் ஈக்வடியுா் மாகாணத்தில் மட்டும் மூன்று படகுகள் தும்பா ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. அந்த ஏரியில் இருந்து 48 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, படகுகளில் சென்ற மேலும் 107 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.
இதற்கிடையே, சனிக்கிழமை முதல் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமனை காரணமாக தலைநகா் கின்ஷாசாவில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி மேலும் 29 போ் உயிரிழந்தனா்.