செய்திகள் :

காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!

post image

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி நடைபெற்றது. வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட புத்தக பிக்குகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணி காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் பகுதியிலிருந்து புறப்பட்டு பழைய ரயில் நிலைய சாலை வழியாக வையாவூரில் உள்ள புத்தர் திருக்கோயிலில் வந்து நிறைவுபெற்றது. பேரணியின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புத்தர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பேரணியில் வந்த பலரும் தேசியக்கொடி மற்றும் பௌத்தக் கொடியினை கையில் ஏந்தியவாறு பாலி மொழியில் பிரார்த்தனை செய்தனர்.

பேரணியில் ஈடுபட்ட புத்த பிக்குகள்

பேரணி புத்தர் திருக்கோயில் வந்து சேர்ந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா நடைபெற்றது. பேரணியிலும் திறப்பு விழாவிலும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சங்காதிபதி தம்மசீலன், சங்க துணைத் தலைவர்கள் பதாந்த். நாகராஜ், புத்தப் பிரகாசம், செயலாளர் போதி.அம்பேத்கர் மற்றும் நிர்வாகிகள் ஜெயசீலன், குணசீலன், ஜீவசங்க மித்திரன் ஆகியோர் உள்பட 200க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கலந்து கொண்டனர்.

ஸ்தூபி திறப்பு விழாவையடுத்து தாய்லாந்து புத்த பிக்குகள் காஞ்சிபுரத்திற்கு வழங்கிய புத்தரின் சீடர்களான மகா மக்லானா மற்றும் சாரி புத்தா என்ற இருவரின் உருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புத்தர் வழங்கி பஞ்சசீலம் போதனைகளைப் பௌத்தர்களுக்கு பிக்குகளால் வழங்கப்பட்டது. பின்னர் புத்தர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் புத்த பிக்குகள் தனித்தனியாக அமர்ந்து உலக நன்மைக்காகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் உலக திரிபிடக ஓதுதல் நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்வுகளில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ச. மு. நாசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் சொ. ஜோ. அருணசேச, ஆணைய உறுப்பினர்கள் பௌத்த இயக்கத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளைப் பௌத்த சங்கப் பேரவை நிறுவனர் ஜா. கௌதம சென்னா, செயலாளர் போதி. அம்பேத்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க