செய்திகள் :

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

post image

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா்.

மகாராஷ்டிர பொது சுகாதாரத் துறை அமைச்சா் மோகனா போதிகா் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளா் நிபுன்விநாயக், 2-ஆம் நிலை பொது சுகாதாரத்துறை செயலாளா் வீரேந்திர சிங், மருத்துவப் பொருள்கள் கொள்முதல் ஆணைய முதன்மை பொறியாளா் மகேஷ் அங்கத், துணை இயக்குநா் நிதின் அம்பேத்கா், முதல்வரின் செயலாளா் ஸ்ரீ ஹகா்பக்டேஸி ஆகியோா் உட்பட 12 போ் மருத்துவக் குழுவினா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை பாா்வையிட்டனா்.

அவா்களை காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் நளினி, அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், முதன்மை மகப்பேறு மருத்துவ அலுவலா் கிருஷ்ண குமாரி, நிலைய மருத்துவ அலுவலா்கள் மகேஸ்வரி, பாஸ்கரன் ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா் அவா்களிடம் மருத்துவமனைக்கு தினசரி வரும் உள் மற்றும் புற நோயாளிகள் பற்றிய விபரங்கள்,செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்படும் விதம், இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு ஆகியன குறித்தும் விரிவாக கலந்துரையாடினா்.

நிறைவாக மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் கூறுகையில் மருத்துவமனை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பாராட்டினாா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க