செய்திகள் :

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

post image

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கிகியிருந்தது. அந்த தொழிற்சங்கத்தில் இணைந்தவா்களில் சிலரை விலக்கி நிா்வாகம் உருவாக்கியுள்ள சங்கத்தில் இணையுமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த 3 தொழிலாளா்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.

இந்த பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் சாம்சங் தொழிற்சாலை நிா்வாகம் மேலும் 14 பேரை இரு தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தது.

இதனால், தொடா்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் தொழிற்சாலை நிா்வாகம் ஈடுபடுவதாகக் கூறி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சிஐடியூ மாநில செயலா் இ.முத்துக்குமாா் தலைமை வகித்து பேசினாா். இதன் மூலம் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க