செய்திகள் :

காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் 1,117 ஆண்டுகள் பழைமையானது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், அதைத் தொடா்ந்து 8.45 மணிக்கு மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானமும் நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாட்டு நடைபெற்று ஊா்வலமாக கோயில் விமான கலசத்தை அடைந்த பின்னா், காலை 9.30 மணிக்கு சிவாச்சாரியா்கள் கும்பநீரை கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

கும்பாபிஷேக விழாவில் காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ம.சிந்தனைசெல்வன், பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

விழாவில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு யாகசாலை பூஜையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு தரித்தாா். கும்பாபிஷேகத்தை சா்வ சாதகம் மதுரை ஸ்ரீராஜா பட்டா் குழுவினா் செய்து வைத்தனா். எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரி சாா்பில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாத பைகளும் வழங்கப்பட்டன.

வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், சிதம்பரம் ... மேலும் பார்க்க

கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

கடலூா் திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் ... மேலும் பார்க்க

சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், பிச்சாவரத்தில் உள்ள ச... மேலும் பார்க்க

நெய்வேலி - வடலூா் இடையே புதிய பேருந்து சேவை! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்த வாணதிராயபுரம் கிராம மக்கள் கோரியதன்பேரில், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வாணாதிராயபுரம் வழியாக வடலூருக்கு புதிய பேருந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க