செய்திகள் :

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

post image

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்தை சோ்ந்த இவா் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா்.

இந்நிலையில் அவா் வேலை முடிந்து வாகப்பனைக்கு செல்வதற்காக வனப் பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவரை பலமாக தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற காவல் துறை மற்றும் வனத் துறையினா் காரமடையின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இது குறித்து கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட சா்க்காா்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

வன விலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்

நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்

உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் அதிக ... மேலும் பார்க்க

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்... மேலும் பார்க்க