செய்திகள் :

"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்வில் வெளியான தகவல்

post image

அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேட்டிங் டாட் காம் நடத்திய ஆய்வின்படி அமெரிக்காவில் 59% பேருக்கு ஹாலோவீன் தினம், ஆண்டின் மிக உணர்ச்சி ரீதியான கடினமான நாளாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலர் இதை காதலர் தினத்தை விட வேதனையும் தனிமையும் அதிகம் இருக்கும் நாளாகக் கூறியுள்ளனர்.

இந்தத் தினத்தில் தங்களுக்கான உடைகள் இல்லாமல், துணை இல்லாமல், குடும்பப் புகைப்படங்கள் எடுக்கும் தருணங்கள் இல்லாமல் அவர்களின் மனநிலை மிகவும் தனிமை உணர்வதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

hallowen celebration REP image
hallowen celebration REP image

சமூக ஊடகங்கள் அவர்களின் தனிமையை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அங்கே பகிரப்படும் புகைப்படங்களாலும் அல்லது சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் இது போன்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளதாகப் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

சமீபத்தில், ஓரிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், "தனிமையைப் போக்கும் மருந்தாக இந்தச் சமூக ஊடகங்கள் அமையவில்லை. மாறாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற தளங்கள் அதிகம் பயன்படுத்துவதால் தனிமை உணர்வு மேலும் வலுப்பெறுகிறது" என்று தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்க மக்களில் சுமார் 50% பேர் ஏற்கனவே தனிமையில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது கொரோனா பிந்தைய காலங்களில் மேலும் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனே கோட்டையில் நமாஸ் செய்ததாகப் பரவிய வீடியோ; கோட்டை முழுதும் கோமியம் தெளித்த பாஜக MPக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே சனிவார்வாடாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை 1732 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். மகாராஷ்டிராவின் கலாசார நகரமான புனேயில் இருக்கும் இந்தச் சனிவார்வாடா கோட்டை மராத்... மேலும் பார்க்க

`காதலிச்சுட்டு ஏமாத்த பாக்குறியா?' - சகோதரியை கைவிட்ட நபர்; பழிவாங்கிய பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் அருகில் உள்ள மெளமா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் அங்குள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் இளைய சகோதரி அடிக்கடி உம... மேலும் பார்க்க

போனஸ் கொடுக்காத கோபம்; டோல்கேட்டை திறந்த ஊழியர்கள்; பணம் கொடுக்காமல் சென்ற வாகனங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் லக்னோவை இணைக்கும் வகையில் யமுனை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் இருக்கிறது. இதில் பதேஹாபாத... மேலும் பார்க்க

வெடி, விளக்கு, இனிப்பு - விருதுநகரில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்வண்ணங்களும் மகிழ்ச்சியும்வண்ணங்களும் மகிழ்ச்சியும்வண்ணங்களும் மகிழ்... மேலும் பார்க்க