செய்திகள் :

`காதலிச்சுட்டு ஏமாத்த பாக்குறியா?' - சகோதரியை கைவிட்ட நபர்; பழிவாங்கிய பெண்

post image

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் அருகில் உள்ள மெளமா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் அங்குள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் இளைய சகோதரி அடிக்கடி உமேஷ் வீட்டிற்கு வந்து சென்றதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனால் மஞ்சுவின் சகோதரியை திருமணம் செய்து கொள்வதாக உமேஷ் உத்தரவாதமும் கொடுத்தார். ஆனால் அப்பெண்ணை திருமணம் செய்ய உமேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதோடு உமேஷிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். உமேஷும் மஞ்சுவின் சகோதரியிடமிருந்து விலக ஆரம்பித்தார். இதனால் மஞ்சுவின் சகோதரி மன அழுத்ததிற்குச் சென்றார். எப்போதும் தனிமையில் இருந்தார். இது மஞ்சுவிற்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது. தனது சகோதரிக்கு திருமண ஆசையை காட்டிவிட்டு திருமணம் செய்ய மறுத்த உமேஷை பழிவாங்க முடிவு செய்தார்.

இதற்காக சம்பவத்தன்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு மஞ்சு உமேஷ் உறங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்றார். அங்கு உறக்கத்தில் இருந்த உமேஷின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டிவிட்டு மஞ்சு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த உமேஷை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். யார் இக்காரியத்தை செய்தது என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் மஞ்சுவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இறுதியில் தாக்கியதை மஞ்சு ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி விவேக்குமார் தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி மர்ம உறுப்பை ஒன்று சேர்க்க ஆபரேஷன் செய்தனர். முழுமையாக குணமடைய 7 மாதங்கள் பிடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மஞ்சு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புனே கோட்டையில் நமாஸ் செய்ததாகப் பரவிய வீடியோ; கோட்டை முழுதும் கோமியம் தெளித்த பாஜக MPக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே சனிவார்வாடாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை 1732 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். மகாராஷ்டிராவின் கலாசார நகரமான புனேயில் இருக்கும் இந்தச் சனிவார்வாடா கோட்டை மராத்... மேலும் பார்க்க

"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்வில் வெளியான தகவல்

அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.டேட... மேலும் பார்க்க

போனஸ் கொடுக்காத கோபம்; டோல்கேட்டை திறந்த ஊழியர்கள்; பணம் கொடுக்காமல் சென்ற வாகனங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் லக்னோவை இணைக்கும் வகையில் யமுனை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் இருக்கிறது. இதில் பதேஹாபாத... மேலும் பார்க்க

வெடி, விளக்கு, இனிப்பு - விருதுநகரில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி கொண்டாட்டம்வண்ணங்களும் மகிழ்ச்சியும்வண்ணங்களும் மகிழ்ச்சியும்வண்ணங்களும் மகிழ்... மேலும் பார்க்க