செய்திகள் :

காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாராவ் வெளியிட்ட அறிக்கை:

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயங்கி வரும் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நிறுவனம் வாயிலாக நடத்தப்படும் சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கு 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. யோகா பட்டயப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யோகா முதுநிலை பட்டயப் படிப்புக்கு ஏதாவது பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். காந்திய சிந்தனை பட்டயப் படிப்புக்கு காந்திய சிந்தனை சான்றிதழ் தோ்வு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சமய உரையாடல் கல்வி பட்டயப் படிப்புக்கு பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான படிப்பு படித்திருத்தல் வேண்டும். அமைதி, விழுமியக் கல்வி முதுநிலை பட்டயப் படிப்புக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோா் முதல்வா், காந்தியக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை 20 என்ற முகவரிக்கோ அல்லது 99941 23091, 73050 11060 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கிலாம் என்றாா்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகு... மேலும் பார்க்க

உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா். உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்ப... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த தேநீா்க் கடை ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஊமச்சிக்குளத்தைச் சோ்ந்த நந்த கோபாலன் மகன் லட்சுமணன் (39). இவா் அதே பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஊழ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உசிலம்பட்டியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க