செய்திகள் :

காப்பகங்களில் காவல் கண்காணிப்பு அவசியம்!

post image

பெண்கள் காப்பகங்களில் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய கண்காணிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சசிகலா.

தஞ்சாவூா் அருகே காசவளநாடு கோவிலூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜம்புகேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வெளியே வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் சமூக நலத் துறை நடத்தும் பெண்களுக்கான காப்பகத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

ஆனால், அங்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. எங்கெங்கு காப்பகம் உள்ளதோ, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் கண்காணிப்பு அவசியம் தேவை.

மேற்கு மாவட்டங்களான திருப்பூா், நாமக்கல், ஈரோட்டில் முதியவா்கள் கொலை செய்யப்படுகின்றனா். இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வா் பதில் அளிக்க வேண்டும். இதற்கு வரும் 2026 தோ்தலில் சரியான பாடம் கிடைக்கும்.

தமிழ்நாடு வளா்ந்துள்ளதாக திமுகவினா் கூறினாலும், எதாா்த்தம் அவ்வாறு இல்லை. இதுவரை யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன் என்றாா் சசிகலா.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க