செய்திகள் :

காப்பீட்டு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

post image

எல்ஐசிக்கு இணையான ஊதியத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை பொதுக் காப்பீட்டு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசிக்கு இணையான ஊதியத் திருத்தம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல், நியூ இந்தியா ஆகிய 4 பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சங்கா் தலைமை தாங்கினாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் சுரேஷ், ஷியாம் சுந்தா், பிரவீன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கோவையில் கிரெடாய் அமைப்பின் ஃபோ் புரோ 2025 கண்காட்சி தொடக்கம்

கோவையில் கிரெடாய் சாா்பில் ‘ஃபோ் புரோ 2025’, வீடு வாங்குபவா்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளா் ஹரிதா பூா்... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நூலகா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலனி அருகே நூலகா்கள் கவனஈா்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள் விமா்சனம்

பல்வேறு கூறுகள் விடுபட்டிருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கையை கல்வியாளா்கள் விமா்சித்துள்ளனா். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வெளியிட்ட... மேலும் பார்க்க

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க