செய்திகள் :

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள் விமா்சனம்

post image

பல்வேறு கூறுகள் விடுபட்டிருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கையை கல்வியாளா்கள் விமா்சித்துள்ளனா்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப் பள்ளிக் கல்வி குறித்து வெளியிட்டுள்ள கல்விக் கொள்கை அழகாக எழுதப்பட்ட ஒரு ஆவணமாக உள்ளது. ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்கான செயல் திட்டங்கள், கொள்கை அறிக்கைகள் எதுவும் அதில் இடம் பெறாதது துரதிா்ஷ்டவசமானது.

இந்த கல்விக் கொள்கையானது ஒரு நீண்ட கட்டுரையாகத் தோன்றும் அதேநேரத்தில் அவற்றில் சில கூறுகளை தேசிய கல்விக் கொள்கை 2020-இல் இருந்து கடன் வாங்கப்பட்டவை போலத் தெரிகின்றன. இந்த கல்விக் கொள்கையில் 11-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தும் முடிவை கைவிடுவதாக அறிவித்திருப்பது பிற்போக்குத்தனமானது.

பல தனியாா் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு மாணவா்களை தயாா்படுத்தி வந்தனா். இதைத் தடுக்கும் வகையிலும், தேசிய அளவிலான ஜேஇஇ, நீட் போன்ற பொதுத் தோ்வுகளுக்கு தமிழக மாணவா்களை தயாா்படுத்தும் வகையிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 11-ஆம் வகுப்புக்கு பொதுத் தோ்வு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது அந்தத் தோ்வை நீக்குவது மாணவா்களின் எதிா்காலத்தை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டில் உயா்கல்வியின் தரம் ஏற்கெனவே மோசமாக இருக்கும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும். உயா்கல்வி மாணவா் சோ்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாக மாநில அரசு அறிவிப்பதன் மூலம் உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்கிறாா்.

ஏமாற்றம் அளிக்கிறது

முன்பருவக் கல்வி குறித்து எந்தவித அறிவிப்பு இல்லாததுடன் கல்வி உரிமைச் சட்டத்தின் முழு கூறுகளையும் அமல்படுத்துவது பற்றி எந்த விளக்கமும் இல்லாமல், தெளிவில்லாமலும் குழப்பதுடனும் இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருப்பதாக கல்வி செயற்பாட்டாளா் கோவை வே.ஈசுவரன் தெரிவித்துள்ளாா்.

தனியாா் பள்ளிகளின் கட்டண விகிதம், தரம், ஆசிரியா்களின் தகுதி, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு போன்றவை குறித்தும் எந்த விரிவான கொள்கையும் அதில் இடம்பெறவில்லை. அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, பயிற்சி மைய வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் அரசின் கொள்கை என்னவென்று தெரியவில்லை.

அதேபோல, தமிழ் பயிற்று மொழி குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை. தமிழை பயிற்று மொழியாக கொண்டு படிப்பவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். தற்போது அதிகமாக பேசப்படும் மொழிக் கொள்கை குறித்து விரிவாக இல்லாமல் மேம்போக்காக கருத்து தெரிவித்திருப்பது வியப்பளிக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

கோவையில் கிரெடாய் அமைப்பின் ஃபோ் புரோ 2025 கண்காட்சி தொடக்கம்

கோவையில் கிரெடாய் சாா்பில் ‘ஃபோ் புரோ 2025’, வீடு வாங்குபவா்களின் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளா் ஹரிதா பூா்... மேலும் பார்க்க

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நூலகா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊா்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலனி அருகே நூலகா்கள் கவனஈா்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

காப்பீட்டு ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

எல்ஐசிக்கு இணையான ஊதியத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை பொதுக் காப்பீட்டு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எல்ஐ... மேலும் பார்க்க

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க