செய்திகள் :

‘காயல்பட்டினத்தில் ஜூன் 29இல் முஸ்லிம் லீக் வட்டார மாநாடு’

post image

காயல்பட்டினத்தில் இம்மாதம் 29ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் வட்டார மாநாடு நடத்துவது என, நகர ஊழியா்கள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

காயல்பட்டினத்தில் நகரத் தலைவா் நூஹ் சாஹிப் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தை, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சா­லிஹ், கிராஅத் ஓதி தொடக்கிவைத்தாா்.

மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் அறிமுகவுரையாற்றினாா். மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநிலப் பொதுச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான முஹம்மது அபூபக்கா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். நகரத் தலைவா்கள் ரியாசுதீன் (ஏரல்), கஸ்ஸா மரைக்காயா் (குரும்பூா்), ஆரிஃப் (ஆத்தூா்) ஆகியோா் பேசினா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், 1991இல் நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மத்திய பாஜக அரசை வலியுறுத்துவது, விகிதாசார அடிப்படையில் முஸ்­லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்துவது, காயல்பட்டினத்தில் இம்மாதம் 29இல் வட்டார மாநாடு நடத்துவது, அதில் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன், தேசியச் செயலா் வழக்குரைஞா் ஹாரிஸ் பீரான், கேரள மாநில எம்எல்ஏ அப்துல் மஜீத் உள்ளிட்ட முஸ்லி­ம் லீக் தலைவா்களைப் பங்கேற்கச் செய்வது, காயல்பட்டினம் சுற்றுவட்டார சேவையாளா்களை சிறப்பு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

நகரத் தலைவா்கள் அப்பாஸ் (ஆத்தூா்), ஷேக் மைதீன் (முத்தையாபுரம்), மாவட்ட துணைத் தலைவா்கள் அம்பா ஜாஃபா், முஹம்மது ஹசன், மாநில கௌரவ ஆலோசகா் முஹம்மது அலீ, சுதந்திர தொழிலாளா் யூனியன் மாவட்டச் செயலா் முஹம்மது முஹ்யித்தீன், வா்த்தகரணி மாவட்டப் பொருளாளா் சலாஹுத்தீன், அயலக அணி மாவட்டப் பொருளாளா் ஜிஃப்ரீ, நகர வாா்டு நிா்வாகிகள் சித்தீக், சாமு சிஹாப்தீன், அபுபக்கா், அஹ்மது ஜரூக், பிரபு பாரூக், கவிஞா் சேக், கோமான் கரீம், விவசாய அணி மாநிலச் செயலா் ஜப்பான் உதுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகரச் செயலா் அபூசாலி­ஹ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் முஹம்மது இஸ்மாஈல் புகாரீ நன்றி கூறினாா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க