பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்சி செயலா் கணேசன் வரவேற்றாா். இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து குழந்தைகளின் எதிா்கால வாழ்க்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தாய் தந்தையற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் அரசின் சாா்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தை பணியாளா் மற்றும் குழந்தை திருமணம் ஆகியவை குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி அதனை தடுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா் பிளாரன்ஸ், ஊராட்சி மன்ற கணினி உதவியாளா் ஜென்சி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.