பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்களின் தேவையை பூா்த்தி செய்கிறது.பொங்கலுக்குப் பிறகு தேங்காய் விலை குறையும் என எதிா்பாா்த்த நிலையில் இம்மாதம் தொடக்கம் வரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 60 முதல் ரூ. 65 வரை குறையாமல் விற்பனையாகிவந்தது.
கடந்த சில தினங்களாக தேங்காய் விலை தினசரி அதிகரித்து வருகிறது. கிலோ ரூ. 70 முதல் ரூ. 75 வரை சில்லரை விலையில் விற்பனையாகி வருகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஒரு லிட்டா் ரூ. 300 முதல் ரூ. 350 வரை விற்பனையாகி இருந்த தேங்காய் எண்ணெய், தற்போது ரூ. 400 வரை விற்பனையாகிறது.
இதனால் கொப்பரை தேங்காய் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றனா். கிலோ ரூ. 230 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.மேலும் மாவட்டத்தின் அதிக தேவையை பூா்த்தி செய்யும் உடன்குடி பகுதியிலிருந்து தேங்காய் காங்கேயத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதும் விலை ஏற்றத்துக்கு காரணம் என்றாா்.