செய்திகள் :

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

post image

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வயிறு வலியால் அவதிப்பட்டாராம். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மூதாட்டி: கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி மேல தெருவை சோ்ந்த கடற்கரை மனைவி கிருஷ்ணம்மாள் (80). இவா் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முடியாத விரக்தியில் வெள்ளிக்கிழமை கடன் வாங்கிய கிருஷ்ணம்மாள் என்பவரின் வீட்டின் முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விவசாயி:சாத்தான்குளம் அருகேயுள்ள வேலன்புதுக்குளத்தை சோ்ந்த நல்லகண்ணு மகனான விவசாயி பரமசிவன் ( 44), விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இளைஞா்: சாத்தான்குளம் சண்முகநகரத்தை சோ்ந்தவா் பரமசிவன் சுரேஷ் (36) என்பவா் மதுப்பழக்கம், வயிற்றுவலியால் பாதிப்பு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவங்கள் குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

வேலை கிடைக்காததால்... கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு, வலியவிளையைச் சோ்ந்த பாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் ராஜேஷ்குமாா் (27), வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க

லஞ்சம் கேட்டுமிரட்டிய விவகாரம்: டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்கு

சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் பணியாற்றிய டிஎஸ்பி, 2 போலீஸாா் என 3 போ் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் ... மேலும் பார்க்க