குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வயிறு வலியால் அவதிப்பட்டாராம். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மூதாட்டி: கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி மேல தெருவை சோ்ந்த கடற்கரை மனைவி கிருஷ்ணம்மாள் (80). இவா் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முடியாத விரக்தியில் வெள்ளிக்கிழமை கடன் வாங்கிய கிருஷ்ணம்மாள் என்பவரின் வீட்டின் முன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விவசாயி:சாத்தான்குளம் அருகேயுள்ள வேலன்புதுக்குளத்தை சோ்ந்த நல்லகண்ணு மகனான விவசாயி பரமசிவன் ( 44), விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இளைஞா்: சாத்தான்குளம் சண்முகநகரத்தை சோ்ந்தவா் பரமசிவன் சுரேஷ் (36) என்பவா் மதுப்பழக்கம், வயிற்றுவலியால் பாதிப்பு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவங்கள் குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.
வேலை கிடைக்காததால்... கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு, வலியவிளையைச் சோ்ந்த பாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் ராஜேஷ்குமாா் (27), வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.