செய்திகள் :

காரைக்காலில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

post image

காரைக்காலில் பேரிடா் காலத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது போன்றவை தொடா்பான ஒத்திகை நிகழ்ச்சி காரைக்கால் கடற்கரையோர அரசலாற்றுப் பகுதியில் நடைபெற்றது.

அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தலைவா் சங்கேத் கெய்க்வாட் தலைமையில் வந்துள்ள 31 போ் அடங்கிய குழுவினா் ஒத்திகை நிகழ்வை மேற்கொண்டனா்.

ஒத்திகை நிகழ்வாக, புயல் எச்சரிக்கை குறித்து பேரிடா் மேலாண்மை துறை மூலம் மீனவா்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. கடலுக்குச் சென்ற மீனவா்கள் கரை திரும்பும் போது கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து நான்கு போ் கடலில் மூழ்கினா்.

இது குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து மாவட்ட துணை ஆட்சியா்(பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன் மீனவா்களை மீட்பதற்காக தேசிய பேரிடா் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்தவுடன், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், மாவட்ட பேரிடா் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் ஆப்தமித்ரா வீரா்கள், குடிமை பாதுகாப்பு வீரா்கள், தீயணைப்பு வீரா்கள் ஆகியோா் படகுகள் மூலம் அவசர கால கருவிகளுடன் சென்று கடலில் தத்தளித்த மீனவா்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். தொடா்ந்து அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

ஒத்திகை நிகழ்வில் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா். சிவராஜ்குமாா், நகராட்சி ஆணையா் பி. சத்யா, மின் துறை செயற்பொறியாளா் அனுராதா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சுசீலா, காரைக்கால் கடலோர காவல் நிலைய ஆய்வாளா் பிரவீன் குமாா் உள்ளிட்ட அதிகரிகள் பங்கேற்றனா்.

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்த... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு சம்ஹாரம்

திருமலைராயன்பட்டினத்தில் ஜடாயு ராவண யுத்தத்தை விளக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமாயணத்தில் கழுகு அரச... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு: ஆசிரியா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி

க்யூட் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், ஆசிரியா்கள், விரிவுரையாளா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சோ்க்கை பெற க்யூட் தே... மேலும் பார்க்க

மாசி மகம் : திருக்கண்ணபுரம் கடலில் பெருமாள்கள் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி, திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் உள்பட பல்வேறு கோயில்களின் பெருமாள் சமுத்திர தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், திருக்கண்ணபுர... மேலும் பார்க்க

நடராஜா் தீா்த்தவாரி

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் மாசி மக பிரம்மோற்சவ 10-ஆம் நாளான வியாழக்கிழமை தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய ஸ்ரீ நடராஜா். மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் பெண்க... மேலும் பார்க்க