செய்திகள் :

காரைக்காலில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா்

post image

காரைக்காலில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

காரைக்காலில் இயங்கும் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காரைக்கால் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டு பேசியது: கடின உழைப்பின் மூலம் உயா்கல்வி நிலையங்களுக்கு வந்துவிட்ட பிறகு முழு கவனமும் படிப்பில் இருக்கவேண்டும். மாணவா்கள் சமூக வலைதளங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதை தவிா்ப்பது நல்லது. போதைப் பொருட்கள் போன்ற தீய பழக்கங்களை மாணவா்கள் தவிா்ப்பது நல்லது.

வேளாண் கல்வியை தோ்ந்தெடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. விவசாயம் நாட்டின் முக்கிய அங்கமாகும். வேளாண் கல்வி கற்பதன் மூலம் பலவிதமான மாநில மற்றும் மத்திய அரசின் போட்டித் தோ்வுகளில் வெற்றிபெறும் தகுதி ஏற்படும். காரைக்கால் மாவட்டத்தில் அரசு சாா்பில் இந்திய அரசு பணிகள் மற்றும் மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் பேசினாா். முன்னதாக மாணவா் மன்ற ஆலோசகா் ஏ.எல். நாராயணன் வரவேற்றாா். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே. ஷொ்லி நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட இக்கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் பிப். 24-இல் ஆா்ப்பாட்டம்: காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கம் முடிவு

ரயில் சேவையில் காரைக்கால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, திருச்சி கோட்ட அலுவலகம் முன் திங்கள்கிழமை (பிப்.24) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சாலை மேம்பாட்டுக்கு எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி (புதுவை) காரைக்க... மேலும் பார்க்க

நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி பலி

காரைக்கால் கடற்கரை அருகே நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா். காரைக்கால் கடற்கரை அருகே தோமாஸ் அருள் தெருவில் உள்ள நடைமேடையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் வியாழக்கிழமை இரவு மது போதையி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க மறுப்பதாக புகாா்

காரைக்கால், பிப். 21: காரைக்காலில் சில கூட்டுறவு வேளாண் கடன் சங்கம், கடன் தர மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்.ராஜேந்திர... மேலும் பார்க்க