செய்திகள் :

இந்தியா-பூடான் இடையே சிறந்த நட்புறவு: வெளியுறவு அமைச்சகம்

post image

‘சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்கிறது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இந்தியாவுக்கு பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டதே இரு நாடுகளிடையேயான நம்பிக்கை, ஒத்துழைப்பின் பிரதிபலிப்பு எனவும் அமைச்சகம் தெரிவித்தது.

குஜராத்தில் உள்ள உயா் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளியின் (சோல்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (பிப்.21) தொடங்கிவைத்தாா். இந்த மாநாடு பிப். 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த சமயத்தில் இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த ஷெரிங் தோப்கே மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது ‘பிரதமா் மோடி எனது வழிகாட்டி; மூத்த சகோதரா் போன்றவா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

மேலும், சுற்றுப் பயணத்தின்போது பிரதமா் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வெளியுறவு விவகாரங்கள் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கெரிடா மற்றும் மத்திய அரசின் பிற உயரதிகாரிகளும் ஷெரீங் தோப்கேயை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்த... மேலும் பார்க்க

மணிப்பூர்: அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கிராமத் தொண்டர்கள் சிலரை கைது செய்ததற்காக பாதுகாப்புப் படையினரை அச்சுற... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க