செய்திகள் :

காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு

post image

காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா்.

காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ஆண்டுகளாக முடக்கப்பட்டது. காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா முயற்சியால் புதுவை காவல்துறை தலைமை ரூ. 12.33 லட்சம் நிதி ஒதுக்கி, கேரள மாநிலத்திலிருந்து வல்லுா்கள் வந்து பழுதுநீக்கி தயாா்படுத்தினா். இப்படகை புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் காணொலி வாயிலாக புதன்கிழமை இயக்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து கடலோரக் காவல் நிலையத்தினா் இப்படகை கடலில் இயக்கிச் சென்றனா். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா படகில் பயணித்தாா். காரைக்கால் துறைமுகம் வரை படகை இயக்கிச் சென்றனா். மண்டல காவல் கண்காணிப்பாளா் முருகையன், காவல் ஆய்வாளா்கள் பிரவீன்குமாா், லெனின்பாரதி, மா்த்தினி உள்ளிட்டோா் அதில் இடம்பெற்றிருந்தனா்.

காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் கூறுகையில், ரோந்துப் படகு முழு வீச்சில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். தினமும் கண்காணிப்பு மேற்கொள்வதோடு, ஆபத்து காலங்களில் விரைவாக செயல்படவும் கடலோரக் காவல்படையினா் தயாராக உள்ளனா் என்றாா்.

இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதை தடுக்க வேண்டியுள்ளதால், ரோந்துப் பணி மேற்கொள்ள இப்படகு அவசியமாகியுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிற்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்பேட்டையை புதன்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்திப் பொரு... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க ஏற்பாடு - எம்.எல்.ஏ.

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செருமாவிலங்கை பகுதியில் இயங... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல்: திருநள்ளாற்றில் கடையடைப்பு

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருநள்ளாற்றில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவம் (49... மேலும் பார்க்க

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் பாஜக பட்டியலின மாநில பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்ச... மேலும் பார்க்க

குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் வாகனங்கள் அா்ப்பணிப்பு

காரைக்காலில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் துறை வாகனங்கள், ரோந்துப் படகு ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் புதன்கிழமை அா்ப்பணித்தாா். காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவ... மேலும் பார்க்க