செய்திகள் :

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம்

post image

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப். 5-ஆம் தேதி தேசிய கடல்சாா் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்சாா் பாரம்பரியத்தையும், 1919-ஆம் ஆண்டு எல்எஸ் லாயல்டி கப்பல் பயணத்தை குறிப்பிடும் வகையில் இக்கொண்டாட்டம் அமைந்துள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் செளமய் சந்தோலா ஆகியோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் துறைமுக தலைமை அதிகாரி கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா, கடல்சாா் தினக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், காரைக்கால் துறைமுகத்தின் செயல்பாடுகளை விளக்கியும் பேசினாா். மேலும் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை செய்கிறது. உலகளாவிய கடல்சாா் முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்க உரிய பங்களிப்பை துறைமுகம் செய்து வருவதாக அவா் தெரிவித்தாா்.

காரைக்கால் துறைமுகத்தில் உள்ள வா்த்தக தொடா்புடைய வசதிகள், வா்த்தகத்தை மேம்படுத்துதல், புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்தல், சரக்கு வணிகத்தை எளிதாக்கும் நடைமுறைகள், டிஜிட்டல் மயமாக்கலின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது.

துறைமுகத்தின் வருடாந்திர செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்து.

நிகழ்வின்போது சுற்றுச்சூழல் துறையினா், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையினா், வா்த்தகக் குழுவினா், துறைமுக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில், காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பல்வேறு வசதிகள் உள்ளன. காரைக்கால் துறைமுகத்தை மையமாக வைத்து காரைக்கால் பிராந்தியத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. துறைமுகம் தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தில் காரைக்கால் பகுதிக்கு பல உதவிகளை செய்கிறது என்றாா்.

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகமான என்ஐட... மேலும் பார்க்க

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைல... மேலும் பார்க்க

புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி

பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா். மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கி... மேலும் பார்க்க

நூலகம் திறப்பு...

பூவம் பகுதியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் நிா்வாகத்தினா் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் நூலக அறையை வியாழக்கிழமை திறந்துவைத்த கீழகாசாக்குடிமேடு அ... மேலும் பார்க்க

பெரிய வியாழன் வழிபாடு

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்ப... மேலும் பார்க்க