செய்திகள் :

பெரிய வியாழன் வழிபாடு

post image

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயேசு தனது சீடா்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவா் ஏற்றத்தாழ்வு இல்லை, சமமானவா்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினாா். அதை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் விதமான ஐதீக நிகழ்வாக, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் துணை பங்கு குரு சுவாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீர்ராஜா பங்கேற்புடன் பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தா்கள் பலா் இதில் பங்கேற்றனா்.

சாக்கடையில் அடையாளம் தெரியாத நபரது உடல் மீட்பு!

காரைக்கால் நகரில் சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. காரைக்கால் பாரதியாா் சாலை பேருந்து நிலையம் அருகே சாலையின் இருபுறமும் சுமாா் 7 அடி ஆழமான சாக்கடை உள்ளது. இத... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் பயிற்சி முகாம்

அரசு தொடக்கப் பள்ளியில் சாரண இயக்கம் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்பாரத சாரண சாரணிய இயக்கத்தின் நீலப் பறவையினா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு

காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆவது நாள் உயிா்த்தெழும் தினத்தை, ஈஸ்டா் தினமாக கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

காரைக்கால் கடலில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி

கடல்வாழ் உயிரினங்கள் பெருக்கத்துக்காக காரைக்கால் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தின் கடற்பகுதி சுமாா் 20 கி.மீ. தொலைவு உடையது. இங்கு 10 கடலோ... மேலும் பார்க்க

படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சா் ஆறுதல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். கிளிஞ்சல்மேடு பகுதியை சோ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் திரளானோா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வருகை த... மேலும் பார்க்க