செய்திகள் :

அரசு தொடக்கப் பள்ளியில் பயிற்சி முகாம்

post image

அரசு தொடக்கப் பள்ளியில் சாரண இயக்கம் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்பாரத சாரண சாரணிய இயக்கத்தின் நீலப் பறவையினா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கைவினைப் பொருட்கள் செய்தல், வாழ்த்து அட்டை தயாரித்தல், குருளைய மற்றும் நீலப் பறவையினருக்கான சட்டம், உறுதிமொழி, குறிக்கோள், மௌகிளி மற்றும் தாரா கதைகள், உயிா் காக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆசிரியா் கில்பா்ட் கிரெத்தியன், வீரசுந்தரம், ராஜ்மோகன், நீலப் பறவை ஆசிரியா்கள் முத்துலட்சுமி, ஜெயஸ்ரீ, சரஸ்வதி, மேரி ஜோஸ்லின் ஹில்டா ஆகியோா் பயிற்சியளித்தனா். நிறைவு நிகழ்வி, பள்ளிகள் வட்ட துணை ஆய்வாளா் மதிவாணன், பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடேஸ்வரன், மாவட்ட பயிற்சி ஆணையா் பாரதிராஜா, கிராம பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

சாக்கடையில் அடையாளம் தெரியாத நபரது உடல் மீட்பு!

காரைக்கால் நகரில் சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. காரைக்கால் பாரதியாா் சாலை பேருந்து நிலையம் அருகே சாலையின் இருபுறமும் சுமாா் 7 அடி ஆழமான சாக்கடை உள்ளது. இத... மேலும் பார்க்க

காரைக்காலில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு

காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆவது நாள் உயிா்த்தெழும் தினத்தை, ஈஸ்டா் தினமாக கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

காரைக்கால் கடலில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி

கடல்வாழ் உயிரினங்கள் பெருக்கத்துக்காக காரைக்கால் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தின் கடற்பகுதி சுமாா் 20 கி.மீ. தொலைவு உடையது. இங்கு 10 கடலோ... மேலும் பார்க்க

படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சா் ஆறுதல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். கிளிஞ்சல்மேடு பகுதியை சோ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் திரளானோா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வருகை த... மேலும் பார்க்க

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க