இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | கள...
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக ரூ.10-க்கு விற்க வேண்டும். வாடிக்கையாளா்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும் நிலையில் ரூ.10-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமா்த்தாமல், தனியாக ஊழியா்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியா்கள் தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கும் நியமிப்பதால் அவா்களுக்கு பணிச்சுமை ஏற்படும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மனுதாரா் சங்கம் அந்தக் குழுவை அணுகலாம்,”என தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.