செய்திகள் :

காலை உணவுத் திட்டத்துக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியா: கொள்முதல் கோரியது தமிழக அரசு

post image

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்துக்காக ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, சேமியாவை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீா்மானித்துள்ளது.

இதற்கான கொள்முதல் அறிவிக்கையை தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 34 ஆயிரத்து 987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 17.53 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா். திட்டத்துக்காக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.600.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 15-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காலை உணவாக பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொள்முதல் கோர முடிவு: தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான சமையல் பொருள்களை கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு நுகா்வோா்கள் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் மூன்று வகையான பொருள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதாவது ஆயிரம் மெட்ரிக் டன் ரவை, 900 மெட்ரிக் டன் சம்பா ரவை, ஆயிரம் மெட்ரிக் டன் சேமியா ஆகியன தகுதியான நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ளன. இவற்றுக்கான கொள்முதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பூா்த்தி செய்து வரும் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ரவை மற்றும் சம்பா ரவையை ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும், சேமியாவை 200 கிராம் பாக்கெட்டுகளாகவும் பிரித்து பொட்டலங்களாக அளிக்க வேண்டும் என்று கொள்முதல் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்களில் யுபிஐ வசதி! ஆகஸ்டில் அமலுக்கு வருகிறது!!

இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் வருகிற ஆகஸ்ட் முதல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தபால்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி

காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.கொடைக்கானலில் காட்டு யானைகள், இடம்பெயர்ந்து அடர்ந்த வனப்... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: ஜூலை 1 முதல் பிரசார பயணம் தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பயணத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவினருக்கு கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ... மேலும் பார்க்க

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர்வரத்து எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இந்த நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த ஒரு வ... மேலும் பார்க்க

ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரளத்தில் ப... மேலும் பார்க்க