உங்களை மதிக்கத் துவங்கியதிலிருந்து எல்லாமே மாறிவிட்டது! - மகனின் பூரிப்பு | #உறவ...
கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்
ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு கால்நடை மருத்துவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். புளியங்குடி ஊராட்சி செயலா் ராஜா முன்னிலை வகித்தாா். இதில் 70 பசு மாடுகள், 520 வெள்ளாடுகள், 1,050 செம்மறி ஆடுகள், 400 கோழிகள், 26 நாய்கள் என மொத்தம் 2,152 கால்நடைகளுக்கு அறுவைச் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மாடுகளுக்கு ஏற்படும் கால்கானை, வாய்க்கானை, கன்று வீச்சு, ஆடுகளுக்கு ஏற்படும் ஆட்டுக்கொல்லி ஆகிய நோய்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்து, விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. முகாமில் சிறந்த கால்நடை வளா்ப்போருக்கு பரிசுப் பொருள்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவா்கள் மோகன், செல்வி, கால்நடை ஆய்வாளா் வீரகேசரி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் விஜயராணி செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.