செய்திகள் :

கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

post image

கோவை சரவணம்பட்டியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவனுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா், தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி மைதிலி. இவா்களது மூத்த மகன் ஹிரித்திக் 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10-ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தாா்.

தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால் சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்று வந்த கோடைக்கால கால்பந்து பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த ஹிரித்திக் தினமும் தனது பெற்றோருடன் கால்பந்து பயிற்சிக்கு வந்து சென்று கொண்டிருந்தாா்.

இந்தப் பயிற்சியின்போது, 2 அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் ஆட்டத்தின்போது ஹிரித்திக்குக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அவரது பெற்றோா் உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு ஹிரித்திக்கை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா்.... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூன் 6 இல் குறைதீா் முகாம்

கோவை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான குறைதீா் முகாம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்த... மேலும் பார்க்க