செய்திகள் :

காங்கோவில் ஐ.நா.அமைதிப்படை பணி: 160 போ் கொண்ட பிஎஸ்எஃப் படை அனுப்பிவைப்பு

post image

புது தில்லி: காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) இந்தியா திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெனி நகரில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட்டு வந்த 17-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு, புதன்கிழமை (ஜூன் 4) இந்தியா திரும்ப உள்ளது.

இதையடுத்து அந்தப் பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள பிஎஸ்எஃப் தலைமையகத்தில் அந்தப் படையினரை, பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜீத் சிங் செளதரி மற்றும் மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினா்.

அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதல் நடவடிக்கை மூலம், தனித்துவமான அங்கீகாரத்தை பிஎஸ்எஃப் பெற்றுளதாகவும், காங்கோவில் 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வழிநடத்த வேண்டும் என்றும் தல்ஜீத் சிங் செளதரி அறிவுறுத்தினாா்.

கமாண்டன்ட் கைலாஷ் சிங் மேத்தா தலைமையிலான 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவில், ஒரு பெண் மருத்துவ அதிகாரி, 24 பெண் காவலா்கள் இடம்பெற்றுள்ளனா்.

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி?

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலர் காயமடைந்தனர்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆக... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

புது தில்லி: நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார்.இதுபோன்ற நடவடிக்கைகள், ந... மேலும் பார்க்க

மே.வங்கத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் புதியதாக 60 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

குஜராத்தில் 461 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

குஜராத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும் அதிகரி... மேலும் பார்க்க

மங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கர்நாடக மாநிலம் மங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மங்களூரின் உல்லால் தாலுக்காவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இன்று (ஜூன் 4) செல்போன் மூ... மேலும் பார்க்க