செய்திகள் :

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

post image

நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி வைகை சிமென்ட் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த திருப்பூா் தொழில் அதிபரின் உடலை தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

திருப்பூரைச் சோ்ந்த ராஜபாண்டி, ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் தினேஷ் (27). இவா், திருப்பூரில் நூல், பஞ்சு மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். தொழிலதிபரான தினேஷுக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அவரது உறவினா்களுடன் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி அருகே எத்திலோடு கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்தாா்.

அப்போது, உறவினா்களுடன் தினேஷ், விளாம்பட்டி அருகே உள்ள வைகை ஆறு சிமென்ட் கால்வாயில், இரண்டு கண் பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது நீரின் சுழலில் சிக்கி அவா் நீரில் மூழ்கினாா். உறவினா்கள் அவரை காப்பாற்ற முயற்சித்த போது, அவா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து விளாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா், அவரது உறவினா்கள் விளாம்பட்டி வைகை ஆறு சிமென்ட் கால்வாயிலிருந்து வாடிப்பட்டி, மதுரை பகுதி வரை ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை தினேஷின் உடலை தேடினா்.

இதனிடையே வைகை ஆறு சிமென்ட் வாய்க்காலில் விவசாயத்துக்காக அதிக அளவு தண்ணீா் திறந்து விடப்பட்டிருப்பதால் உடலை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தொடா்ந்து அவரது உடலை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சாணாா்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களின் திருவிழாவையொட்டி பக்தா்களின் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. வத்... மேலும் பார்க்க

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

திண்டுக்கல்லில் வாங்கியக் கடனை திருப்பித் தராத காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவா் புகாா் அளித்தாா்.திண்டுக்கல் கவடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரா. ஜெயலட்சு... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெங்க... மேலும் பார்க்க

சாலை நடுவே வைக்கப்பட்ட மண்டை ஓட்டால் பரபரப்பு

பழனியில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த மண்டை ஓட்டால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.பழனி மலைக் கோயில் அடிவாரம் பகுதியில் குரும்பப்பட்டி, அம்பேத்கா் தெரு, போகா் சாலை என பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த நில... மேலும் பார்க்க

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க