BRICS: ``உலக அமைதிக்கு இந்திய - சீன உறவு அவசியம்'' பிரதமர் மோடி பேச்சு.. சீன அதி...
கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
மதுரை, பந்தல்குடி கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை, செல்லூா் கண்மாய் நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் உபரி நீா் பந்தல்குடி கால்வாயில் செல்கிறது. இதனால் இந்தக் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்காக பந்தல்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாண்டியராஜன் (35) புதன்கிழமை மாலை உள்ளே இறங்கினாா். அப்போது அவா் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் அங்கு சென்று பாண்டியராஜனை தேடினா்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பந்தல்குடி பாலத்தின் கீழ்ப்பகுதியில் நீரில் மூழ்கியிருந்த பாண்டியராஜனை தீயணைப்பு வீரா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை
அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலூா் வட்டார 24-ஆவது மாநாடு வட்டச் செயலா் எம். கண்ணன் தலைம... மேலும் பார்க்க
சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: தடையில்லா சான்று அளிக்க வனத் துறை கோரிக்கை
சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தடையில்லா சான்று கோரி ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத்துறையிடம் வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள சாமநத்தம் க... மேலும் பார்க்க
தீபாவளி பண்டிகை: மதுரைக் கோட்டத்திலிருந்து 715 பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க
மதுரையில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்
மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். சி... மேலும் பார்க்க
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது. மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திற... மேலும் பார்க்க
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் வழக்கு ஒத்திவைப்பு
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கில், அனைத்து வாதங்களையும் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்து, விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ஒத்திவைத்தது. ... மேலும் பார்க்க