கால் சென்டா் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: வெளி மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது
புதுச்சேரி: போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) நடத்தி நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் சிவனேஷ். இவா் வேலை தேடி பல இணையதளங்களில் பெயரைப்பதிவு செய்திருந்தாா். இதையடுத்து அவரது கைப்பேசிக்கு எச்.ஆா். என குறிப்பிட்டு மா்ம நபா் அழைத்துள்ளாா். அதன்படி, பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறிய அந்த நபா், வேலைக்கான தோ்வுக் கட்டணம், செயலாக்க கட்டணம் என பல கட்டணங்களாக ரூ. 1.74 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்த கூறியுள்ளாா். இதை நம்பிய சிவனேஷ், ரூ.1.74 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளாா். பணம் செலுத்திய பிறகு மா்ம நபரை கைப்பேசியில் தொடா்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிவனேஷ் இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் அப்பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், சிவனேஷ் செலுத்திய பணத்துக்குரிய வங்கிக் கணக்கானது ஹரியாணாவைச் சோ்ந்த பா்வீன், கௌரவ் ஆகியோருக்கு உரியது எனத் தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்கானது ஹரியாணா மாநிலம் பரிதாபாதில் இருப்பதும் கண்டறியப்பட்டது. அத்துடன் பா்வீன், கௌரவ் இருவரும் புதுதில்லியில் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த புதுச்சேரி போலீஸாா், பா்வீன், கௌரவ் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா்.
இது முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியது: பா்வீன், கௌரவ் ஆகியோா் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனா். அவா்களில் கௌரவ் கடந்த 2019 -ஆம் ஆண்டு நொய்டாவில் வேலைவாய்ப்பு மோசடி அழைப்பு மையத்தில் (கால் சென்டா்) வேலை பாா்த்துள்ளாா். அதன்பின் கரோனா பாதிப்பு நேரத்தில் தனது நண்பா் சந்தீப்புடன் சோ்ந்து போலி அழைப்பு மையம் தொடங்கி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக ஏராளமானோரை ஏமாற்றி பணம் பறித்துள்ளனா்.
அதனடிப்படையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. மோசடிக் கும்பலைச் சோ்ந்த 2 பேரை முதன்முறையாக புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவினா்தான் கைது செய்துள்ளனா். இவா்களுடன் இணைந்து செயல்பட்ட சந்தீப் என்பவா் தலைமறைவாகியுள்ளாா். அவரும் விரைவில் பிடிபடுவாா். தற்போது கைதான இருவரில் ஒருவா் பொறியியல் பட்டதாரி என்றாா்.