செய்திகள் :

காவலர்களுக்கான வார விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

post image

சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. அது உண்மைதான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது பேரவை உறுப்பினர் ம. சிந்தனை செல்வன் பேசியதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டு அளித்த பதிலில்,

பேரவை உறுப்பினர் ம.சிந்தனை செல்வன் அவர்கள், இங்கு உரையாற்றுகிறபோது காவலர்கள் விடுமுறையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை 4,48,983 நாள்கள் வார விடுமுறையும், SSI மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை வீதம் 67,233 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான சட்டம்-ஒழுங்குப் பராமரிப்புப் பணிகள் உள்ள காலங்களில் மட்டும், தவிர்க்க இயலாத காரணங்களினால், சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது என்று அவரே குறிப்பிட்டுச் சொன்னார். அது உண்மைதான். மற்றபடி வழக்கமான காலங்களில் வார விடுமுறை நடைமுறையிலிருந்து வருகிறது.

அதேபோன்று, உறுப்பினர் ஊதிய முரண்பாடு பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னார். அதைப் பொறுத்தவரையில், காவல் துறையில் காவல் ஆளிநர்களாகப் பணியமர்த்தப்பட்டு, பதவி உயர்வு மற்றும் பல்வேறு நிலைகளில் காவல் ஆளிநர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகள், ஊதியக் குழு அறிமுகத்தால் வரும் ஊதிய முரண்பாடுகள் தவிர்த்து, தொடர்பான கருத்துருக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

அதேபோன்று, காவலர்கள் பணி உயர்வு பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னார். இதுதொடர்பாக, அந்தந்த காவலர்கள் பணியாற்றும் அந்தந்த மாவட்டம், மாநகரத்திலுள்ள காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்கள்தான் முடிவெடுக்க விதிகளில் இடம் உள்ளது. எனவே, மாநில அளவில் ஒரே வகையான State Seniority அடிப்படையிலே பதவி உயர்வு வழங்குவதற்கு தற்போதைய விதிகளில் இடம் இல்லாத நிலை நிலவுகிறது என்பதை உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித் குமார... மேலும் பார்க்க

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு!

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்ட... மேலும் பார்க்க

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க