செய்திகள் :

காவலர் மீது துப்பாக்கிச் சூடு : சிறுவன் கைது

post image

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களைக் கண்டறியும் விதமாக டிஎல்எம் மருத்துவமனை அருகே போலீஸôர் புதன்கிழமை காலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பதிவெண் பொருத்தப்படாத மோட்டார்சைக்கிளில் இருவர் வருவதைப் பார்த்த போலீஸôர், வாகனத்தை நிறுத்தும்படி அவர்களுக்கு சைகை காண்பித்தனர்.

இதைப் பார்த்த, அந்த நபர்கள் நிறுத்தாமல் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

இதையடுத்து, போலீஸôர் அந்த மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர்.

அப்போது, வாகனத்தின் பின்னிருக்கையில் இருந்த சிறுவன் போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், தலைமைக் காவலர் ரோஹித் அதிருஷ்டவசமாக காயமின்றி உயர்தப்பினர்.

சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, மோட்டார் சைக்கிள் சமநிலையை இழந்தது.

அப்போது, சாலையில் விழுந்த அவர்களில் ஒரு நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸôர் மடக்கிப் பிடித்தனர்.

அவரிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, இரு தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் அது நரேலா பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் எனத் தெரியவந்தது. பிற வழக்குகளில் அந்தச் சிறுவனுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

உ.பி.யில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை:3 பேர் கைது

தில்லி காவல்துறை மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை முறியடித்து, உத்தர பிரதேசம் மொரதாபாதில் ஒரு ஆயுத உற்பத்திப் பிரிவையும் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவி... மேலும் பார்க்க

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில்... மேலும் பார்க்க

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிர... மேலும் பார்க்க

நவராத்திரி ஊர்வலத்தில் கத்திக் குத்து சம்பவம்: சிறுவன் உள்பட இருவர் கைது

மத்திய தில்லியில் நடைபெற்ற நவராத்திரி ஊர்வலத்தின்போது இரு குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது ச... மேலும் பார்க்க

தில்லி பல்கலை.யில் கூடுதல் சுற்று: மாணவர் சேர்க்கை தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான நேரடி கூடுதல் சுற்று (மாப்-அப்) மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.முதல் நாளில் 73 பிஏ ஹானர்ஸ் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க