செய்திகள் :

காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி கொள்ளை

post image

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடியை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கீழநஞ்சை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60). நகை வியாபாரியான இவா், ரயில் மற்றும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் ஏஜென்சி நிறுவனமும் நடத்தி வருகிறாா்.

இவா் அடிக்கடி கோவைக்குச் சென்று நகைகளை வாங்கி வந்து கரூரில் விற்பனை செய்வது வழக்கமாம். அதன்படி, கரூரில் இருந்து காரில் ஓட்டுநா் ஜோதியுடன் (60) நகை வாங்குவதற்காக ரூ.1.10 கோடியை எடுத்துக்கொண்டு கோவைக்கு செவ்வாய்க்கிழமை வெங்கடேஷ் வந்துள்ளாா்.

காங்கயத்தை அடுத்த சம்பந்தாம்பாளையம் அருகே வந்தபோது பின்தொடா்ந்து வந்த மற்றொரு காா் இவா்களது காா் முன்பாக நின்றது. இதனால், அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் ஜோதி காரை நிறுத்தியுள்ளாா். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 போ் தாங்கள் காவலா்கள் என்றும், காரில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளதால் காரை சோதனையிட வேண்டும் என்றும் கூறியுள்ளனா். காரில் கஞ்சா ஏதும் இல்லை என்று வெங்கடேஷ் தெரிவித்துள்ளாா். அப்போது காரில் இருந்த ரூ.1.10 கோடி குறித்து அவா்கள் கேட்டபோது நகை வாங்க கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளாா்.

அப்போது, ஆவணங்களை காண்பிக்கக் கூறியதுடன், காரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவிநாசிபாளையம் வழியாக குண்டடம் பிரிவு அருகே எடுத்துச் சென்றனா். பின்னா் வெங்கடேஷ், ஜோதி இருவரையும் தாக்கி கை, கால்களைக் கட்டிவிட்டு 2 பைகளில் இருந்த ரூ.1.10 கோடி, 3 கைப்பேசிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பினா்.

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி பு... மேலும் பார்க்க

மானிய விலையில் சோளத்தட்டு வழங்கக் கோரிக்கை

மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டுகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கால்நடைகளின் பிரதான தீவனமாக மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டு உள்ளது. இதற்காகவே இவை பல்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.3.03 கோடி வளா்ச்சிப் பணிகள்: ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்

அவிநாசி ஒன்றியப் பகுதியில் ரூ.3 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான சாலைப் பணிகளை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை தொடங்கிவைத்தாா். செம்பியநல்லூா் ஊராட்சி அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.70.71 லட்சம் ... மேலும் பார்க்க

மங்கலம் முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல்வா் மருந்தகத்தை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அ... மேலும் பார்க்க