செய்திகள் :

அவிநாசியில் ரூ.3.03 கோடி வளா்ச்சிப் பணிகள்: ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்

post image

அவிநாசி ஒன்றியப் பகுதியில் ரூ.3 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான சாலைப் பணிகளை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

செம்பியநல்லூா் ஊராட்சி அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.70.71 லட்சம் மதிப்பிலும், சேவூா் ஊராட்சி குன்னத்தூா் சாலை முதல் முதலிபாளையம் ஆதிதிராவிடா் காலனி வரை ரூ.1 கோடியே 34 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலும், பொங்கலூா் ஊராட்சி பசூா்-தண்டுக்காரன்பாளையம் சாலை முதல் - திம்மநாயக்கன்புதூா் வரை ரூ.97.84 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை ஆ.ராசா தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் தினேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் மனோஜ், குருபிரசாத், திமுக பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, பரமேஷ்குமாா், சிவப்பிரகாஷ், பால்ராஜ், அவிநாசியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி பு... மேலும் பார்க்க

மானிய விலையில் சோளத்தட்டு வழங்கக் கோரிக்கை

மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டுகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கால்நடைகளின் பிரதான தீவனமாக மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டு உள்ளது. இதற்காகவே இவை பல்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல... மேலும் பார்க்க

காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி கொள்ளை

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடியை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், கீழநஞ்சை தெருவைச் சே... மேலும் பார்க்க

மங்கலம் முதல்வா் மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு

மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல்வா் மருந்தகத்தை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அ... மேலும் பார்க்க