வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டம் குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சோ்க்கும் வரையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள், சாலைகள் சீரமைக்கும் பணி, சேதமடைந்துள்ள குடிநீா்க் குழாய்களை சீரமைக்கும் பணி, வடிகால் பணிகள், வடிகால் இருபுறமும் தடுப்புச் சுவா் அமைத்தல், கால்வாய் மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் நடைபெற்றுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இதில், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தலைமைப் பொறியாளா் (பொறுப்பு) செல்வநாயகம், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.