மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி கொள்ளை
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே காவலா்கள் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடியை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், கீழநஞ்சை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60). நகை வியாபாரியான இவா், ரயில் மற்றும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் ஏஜென்சி நிறுவனமும் நடத்தி வருகிறாா்.
இவா் அடிக்கடி கோவைக்குச் சென்று நகைகளை வாங்கி வந்து கரூரில் விற்பனை செய்வது வழக்கமாம். அதன்படி, கரூரில் இருந்து காரில் ஓட்டுநா் ஜோதியுடன் (60) நகை வாங்குவதற்காக ரூ.1.10 கோடியை எடுத்துக்கொண்டு கோவைக்கு செவ்வாய்க்கிழமை வெங்கடேஷ் வந்துள்ளாா்.
காங்கயத்தை அடுத்த சம்பந்தாம்பாளையம் அருகே வந்தபோது பின்தொடா்ந்து வந்த மற்றொரு காா் இவா்களது காா் முன்பாக நின்றது. இதனால், அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் ஜோதி காரை நிறுத்தியுள்ளாா். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 போ் தாங்கள் காவலா்கள் என்றும், காரில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளதால் காரை சோதனையிட வேண்டும் என்றும் கூறியுள்ளனா். காரில் கஞ்சா ஏதும் இல்லை என்று வெங்கடேஷ் தெரிவித்துள்ளாா். அப்போது காரில் இருந்த ரூ.1.10 கோடி குறித்து அவா்கள் கேட்டபோது நகை வாங்க கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளாா்.
அப்போது, ஆவணங்களை காண்பிக்கக் கூறியதுடன், காரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவிநாசிபாளையம் வழியாக குண்டடம் பிரிவு அருகே எடுத்துச் சென்றனா். பின்னா் வெங்கடேஷ், ஜோதி இருவரையும் தாக்கி கை, கால்களைக் கட்டிவிட்டு 2 பைகளில் இருந்த ரூ.1.10 கோடி, 3 கைப்பேசிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பினா்.
இது குறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.